பக்கம்:மாபாரதம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

137


“நம்பி! நீ தருமன் தம்பி: அதனால் உன்னை நம்பித் தரலாம்” என்று சொல்லி அதை இயக்கும் விதத்தையும் மந்திரத்தையும் சொல்லி அருளினான் சிவன்.

இந்திரன் அழைப்பு

அருச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த போது அவன் தவத்தில் இருக்கிறானா என்பதை அறிய இந்திரன் சோதனை வைத்தான். இந்திரபுரியில் இருத்த சுந்தர வதனவனிதையா சிலரை அவன் முன் ஆட வைத்தான். அவர்களை நாட வைக்க முயன்றான்; அவர்கள் தோற்று அவ் இடத்தை விட்டு அகன்றனர். அவன் மனத்திண்மை கண்டு இந்திரன் வியந்தான். அவன் உறுதி கொண்ட நெஞ்சத்தை பாரதி போல் வியந்து பாராட்டினான்

அத்திரம் பெற்றதும் அவன் தனித்திறம் பாராட்ட அவனுக்கு அழைப்பு விடுத்தான். தன் நகருக்கு அழைத்து அவனுக்கு இருபணிகளை இட்டான். நிவாத கவசர், கால கேயர் என்ற அசுரர்களைத் தான் வெல்ல முடியாமல் வேதனையோடு வாழ்ந்து வந்தான். வீர மகனைக் கண்டு அவர்களை அடக்கி அழிக்க அவனை வேண்டினான். தெய்வத் தந்தையின் பணியைத் தனயனான தனஞ்செயன் செய்து முடித்தான். அவர்களை வென்றதால் வெற்றி விழாக்கொண்டாட இந்திரன் ஏற்பாடுகள் செய்தான். நாட்டிய விழா ஒன்று வைத்து ஊர்வசியை ஆட வைத்தான். அவள் அங்க நெனிவுகளைக் கண்டு நாட்டியம் ரசித்தான். கலை அழகைப் பாராட்டி அவளை உயர்த்திப் பேசினான். அவள் அவன் வலை அழகில் விழுந்து மயங்கினாள்.

அன்று இந்திரனோடு இன் அமுது அருந்தி அவன் தனி அறையில் படுத்து உறங்கினான். கதவு தட்டும் சிறு ஓசை அவன் காதில் விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/140&oldid=1037281" இலிருந்து மீள்விக்கப்பட்டது