பக்கம்:மாபாரதம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

மாபாரதம்


நகுலன் குதிரையைப் பராமரிப்பதில் வல்லவனாக இருந்தான். அந்த தேசத்து அரசனின் குதிரைகளைக் கண் காணிக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டான்; சகாதேவன் ஆநிரை மேய்க்கும் தொழிலை ஏற்றுக் கொண்டான் திரெளபதி அரசிக்கு அலங்கரிக்கும் பணிப்பெண்ணாகப் பணி ஏற்றாள். ‘வண்ணமகள்’ என்று அவள் தொழிலால் அவளை அழைத்தனர். அருச்சுனன் தான் விரும்பும்போது பேடி வடிவம் பெறச் சாபம் பெற்றிருந்தான். அதைப் பயன்படுத்தி அரச மகளுக்கு அழகுக் கலைகள் பயிற்றுவிக்கும் எடுபிடியாகப் பணி ஏற்றான். பிருகந்நளை என்பது அவன் பெயர்.

ஒருவரை ஒருவர் தெரிந்தவர்போல் காட்டிக்கொள் ளாமல் ஒதுங்கியே பழகினர். கூட்டு வாழ்க்கை சிதறிவிட் டது. எனினும் அரண்மனை வாசம் அவர்களுக்கு வசதிகளைத் தந்தது. அவர்கள் ஆற்றல் வெளிப்படும் வகையில் ஒரு சில சூழ்நிலைகள் உருவாயின.

மற்போர் செய்தல்

வெளிநாட்டு மல்லன் ஒருவன் மச்ச நாட்டுக்கு வந்து தன்னோடு அச்சமில்லாமல் போர் செய்ய வல்லவர் உண்டோ என்று வினா விடுத்தான்; வீமன் அங்கு முக மூடியாய் இருந்தபோது அவன் பெயர் பலாயினன் என்பது; அவன் மல்லனைச் சந்திக்க முடியும் என்று அரசியிடம் திரெளபதி சொல்லி வைத்தாள்.

அதனால் அடுப்பங்கரை ஆளாக இருந்த அவன் போர் மடுக்கும் மல்லனாக வெளியில் அவனைச் சந்தித்து அவனோடு மற்போர் செய்து மண்ணைக் கவ்வ வைத்தான்; அதனால் வீமன் புகழ் ஓங்கியது. அதனால் அவன் கருவமும் ஓங்கியது. அவனைக் கண்டு மற்றவர்கள் அஞ்சினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/157&oldid=1048209" இலிருந்து மீள்விக்கப்பட்டது