பக்கம்:மாபாரதம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

193


பேய் என்றாலும் தாய் என்று வந்தால் அவள் தெய்வம் ஆகிவிடுகிறாள் என்பதை உணர முடிந்தது.

அவன் அவளைப் பார்த்த பார்வையில் கேள்விகள் பல அடங்கி இருந்தன.

“எப்படியம்மா மனம் வந்தது பெட்டியில் வைத்து ஆற்றில்போட, தேர் ஒட்டி என்னை எடுத்து வளர்க்கா விட்டால் ஏர் ஒட்டிக்கொண்டு உழுது கொண்டு இருப்பேன். இல்லாவிட்டால் அடையாளம் தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்க்கப்பட்டுக் கிடப்பேன். தார் வேந்தன் துரியன் என்னை அங்கத நாட்டின் அதிபதியாக்கினான். தம்பியரைவிட என்னிடம் அதிக தயவு காட்டினான். எனக்கு மணிமுடி சூட்டி மகுடம் தந்து அகிலம் மதிக்க வைத்தான். நட்புக்கு அவன் சிறந்த எடுத்துக் காட்டு. அவன் மனைவியுடன் யான் தனித்துக் காய் வைத்துச் சூது ஆடினேன். சூதுவாது தெரியாத அந்த மாது அவன் வந்த போது வெடுக்கென்று எழுந்தாள். அரைகுறை ஆட்டத்தில் நிலைகுலைந்து எழுகிறாள் என்று எண்ணி அவளை ஆடச் சொல்லி ஆடையைப் பிடித்து இழுத்தேன். ஆடையில் இருந்த மணிகள் நிலத்தில்விழுந்து சிதறின; சிதறிய முத்துக்களை எடுக்கவோ கோக்கவோ என்று கேட்டான் துரியன். அவன் மனைவி பதறிப்போன நிலையில் இந்த வினாவை உதிர்த்தான். அவன் அந்தரங்க சுத்தி அவதூறாக என்னைக் கருதவில்லை. செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கின்ற என்னை என் தம்பியருடன் மீட்டுச் சேர்க்கலாம் என்று இப்பொழுது வந்திருக்கிறாய். அது எப்படி முடியும்? ஆளப் பிறந்தவர்கள் அவர்கள் என்றால் மாளப் பிறந்தவன் யான் ஆவேன்” என்றான்.

“தம்பியருக்குத் தலைமை தாங்கு, தரணிக்கு ஆவாய் நீ வேந்து” என்றாள்.

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/196&oldid=1048241" இலிருந்து மீள்விக்கப்பட்டது