திற்கு உரியர் என்ற கருத்து இப்பொழுது உருவாகி வருகிறது, இளம் விதவைகள் தாய்மை அடையாவிட்டால் வமிச விருத்தி இல்லாமல் போய்விடும். ஆட்சிக்கு ஒரு ஆண்மகன் இல்லை என்று ஆகிவிடும்; அந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
சத்தியவதி ஒரு அசாதாரண அறிவாளி; வீடுமனைக் கொண்டு ஏன் ஒரு மகனைத் தன் மருகியர் பெற்றுத்தரக் கூடாது என்று தீவிரமாகச் சிந்தித்தாள்; வீடுமனை அழைத்துப் பேசினாள்.
“அவசரப்பட்டு நீ சூள் உரைத்தாய்; அதனால் மணத்தை மறுத்தாய்”.
“அவசியத்துக்காகத் தானே எடுத்தேன்”.
“இப்பொழுது குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதே”.
“அதற்காக இந்த வயதில் நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா?”
“காலம் கடக்கவில்லை”
“ஆசைகளை அடிவேருடன் களைந்து வாழ்ந்து வரு கிறேன். கொள்கை என் உயிர்; அது என் மூச்சு” என்றான்.
“நீ எனக்கு மூத்தமகன்”
“மறுக்கவில்லை”
“நீ ஒருத்தியோடு உறவு கொள்; மகனை அளித்து எங்களை மகிழவை”
“இயலாது; அவர்கள் என் சகோதரிகள்; இந்த மன நிலையை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது”.
“இப்பொழுது என்ன செய்யலாம்?"