பக்கம்:மாயக் கள்ளன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 பிறகு, அது கண்ணைத் திறந்து பார்க்கிற போது எங்கும் வெளிச்சமாக இருந்தது. அந்த இடத்தைச் சின்னப் பாப்பா முன்னால் பார்த்ததில்லை. எல்லாம் புதுமையாக இருந்தது. பாப்பாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதற்கு மறுபடியும் பயம் உண்டாயிற்று. அது வாய்விட்டு அழத்தொடங்கிற்று. அந்தச் சமயத்திலே அங்கே ஒரு தேவதை வந்தது. பாப்பா வுக்கு வேடிக்கையெல்லாம் காட்ட ஆரம்பித்தது. ஒரு குளத் திலே செந்தாமரைப் பூக்கள் அழகாகப் பூத்திருந்தன. சின்னப் பாப்பாவை ஒரு தாமரைப்பூ வின்மேல் கொண்டு போய் அந்தத் தேவதை வைத்தது. தாமரைப்பூ தண்ணீரில் ஆடித் தாலாட்ட ஆரம்பித்தது. உடனே சின்னப் பாப்பா ஓர் அழகான பொன்வண்டாக மாறித் தாமரைப்பூவிலே தேன் குடித்துவிட்டுச் சுக மாகப் படுத்துக்கொண்டிருந் KA அந்தச் சமயம் பார்த்து அங்கே ஒரு மந்திரவாதி வந்தான்: அவன் சின்னப் பாப்பாவைத் தூக்கிக்கொண்டு போக ஒரு தந்திரம் செய்தான். அவன் மந்திரக்கோலை எடுத்துத் தட்டினான். அ து உடனே அவன் ஒரு புதுவித மான தாமரைப் பூவாக உருவ மெடுத்தான். குளத்திலே இருந்த தாமரைப்பூக்களெல் லாம் சிவப்பாக இருந்தன. இந்தப் புதிய தாமரைப்பூ நீல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/25&oldid=1276966" இலிருந்து மீள்விக்கப்பட்டது