பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மந்திரக் கோலின் அடி

அந்த மனிதன் ஏதோ சொல்லப் போகிறான் என்பதை மன்னர் அறிந்து கொண்டார். அவன் சொல்வதைக் கேட்க அவர் ஆயத்தமாய் இருந்தார்,

"மண்டலங்களை யெல்லாம் கட்டியாளுகிறோம் என்ற மமதை கொண்ட மன்னனே, கேள். முதலில் நான் யார் என்பதைச் சொல்கிறேன். அதன் பிறகு உன் மகளை நான் தேடி வந்த காரணத்தைச் சொல்கிறேன்.

"வடநாட்டில் உச்சயினி என்ற பெயரிலே ஒரு பட்டணம் உண்டு. அந்த பட்டணத்து மன்னனைத் தோற்கடித்து நீ கப்பம் வாங்கிவருகிறாய். ஆதலால் அந்தப் பட்டணத்தைப்பற்றி உனக்கு நன்றகத் தெரியும். ஆனால் அதற்குப்

13