பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாய்க்குள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். இறைவனைத் தொழுதுவிட்டு மந்திரித்த அந்தத் திருநீற்றை எதிரில் துவண்டு கிடந்த இளவரசி செந்தாமரையின் நெற்றியில் பூசினார்.

இளவரசி அசையவில்லை.

குருக்கள் வியப்படைந்தார். அன்றுவரை அவர் மந்திரித்த திருநீறு வீணாகியதில்லை. இன்று அந்தத் திருநீற்றைப் பூசியும் எவ்விதமான பலனும் இல்லை என்பதைக் கண்ட போது அவர் திகைப்படைந்தார்.

மீண்டும் அவர் தம் ஆசனப் பலகையில் அமர்ந்தார். தம் உள்ளங்கையில் திருநீற்றை அள்ளி வைத்துக்கொண்டார். அதில் வெற்றிலைக் காம்பால் வட்டமாக ஒரு சக்கரம் வரைந்தார். அந்தச் சக்கரத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். பயபக்தியோடு மாமன்னரும்

21