பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




மணிவண்ணனின் எண்ணம்

புள்ளம்பாடி என்பது ஒரு சின்னஞ் சிறிய ஊர். அந்த ஊரிலே மொத்தம் நூறு வீடுகள் கூட இருக்காது. அந்த வீடுகளிலே ஐந்தாறு வீடுகள்தான் ஒட்டு வீடுகள். மற்றவை யெல்லாம் ஒலைக் குடிசைகள். அவற்றிலே தென்னங் கீற்ருேலைக் குடிசைகளும் இருந்தன, பனையோலைக் குடிசைகளும் இருந்தன. அந்தக் குடிசைகளில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஏழைகள் என்று சொல்லியா தெரிய வேண்டும்.

பெரும்பாலும் அந்த ஊரில் இருந்த மக்கள் உழவுத் தொழிலே செய்து பிழைத்து வந்தார்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிப்பதற் காக ஒரு சிறு திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்தது.

29