பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்றெல்லாம் ஊர் முழுவதும் இதே பேச்சாய் இருந்தது.

மாமன்னருக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கேட்டுச் சிலர் வருந்தினர்கள்.மந்திரவாதியின் வல்லமையைக் கேட்டுச் சிலர் அஞ்சினர்கள். யாரால் ஆகும் இந்தச் செயல் என்று சிலர் பேசினர்கள்.நாலைந்துநாட்கள் ஊரெங்கும்இதே பேச்சாய் இருந்தது. பிறகு சிறுகச் சிறுக இந்தப் பேச்சுக் குறைந்து விட்டது. ஒவ்வொருவரும் தத்தம் வேலையைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.

திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர் ஒருநாள் தனியாக உட்கார்ந்திருந்தார். பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு புள்ளம்பாடியிலிருந்து பெரும்பாலோர் போய் விட்டார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கும் அன்று விடுமுறை விட்டு விட்டார் ஆசிரியர். அவருக்குத் தலை வலியாக இருந்ததால் திருவிழாவுக்குப் போகவில்லை பள்ளிக் கூடத்துத் திண்ணையின் மேலேயே சோம்பலாகச் சாய்ந்துகொண்டிருந்தார்.

32