பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமன்னரும் மணிவண்ணனும்

மாமன்னர் சோமசுந்தரமாராயர்தம் எதிரே வந்து நின்ற இளைஞனை உற்றுநோக்கினார்.

அரண்மனை மணிமண்டபத்திலே தங்கச் சிங்காதனத்திலே அவர் வீற்றிருந்தார். அமைச்சர்கள் பத்துப்பேர் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தார்கள். மெய்க்காவலர் இருவரும், சிப்பாய்கள் அறுவரும் உடன் இருந்தனர். இவர்களுக்கு நடுவிலே அரசரின் முகத்துக்கு எதிராக மணிவண்ணன் நின்று கொண்டிருந்தான். அவனைத்தான் மாராயர் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

மணிவண்ணனின் இயற்கை அழகு அரசர் மனத்திலே அன்பு சுரக்கச் செய்தது.

37