பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகிழ்ச்சியடைகிறேன்.ஆனால் மந்திரவாதிக்குப் பதில் சொல்ல அவன் எனக்கு ஒரு மாதம் தவணை கொடுத்திருக்கிருன். இப்போது பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பதினைந்து நாட்களில் உன் முயற்சி வெற்றி பெறாட்டால் இளவரசிக்கு மந்திரவாதி ஏதாவது தீங்கு செய்வான். இந்த அரசுக்கும் ஏதேனும் கேடுவரக்கூடும். ஆகவே இரண்டு வாரத்திற்குள் உன் வேலை முடியவேண்டும் என்பதை நினைவு வைத்துக் கொள்.

"உனக்குப் பணம் தேவைப்படும்போது ஐம்பத்தாறு தேசத்திலும் உள்ள எந்த நகரத்துப் பொருளாதிபதியிடமிருந்து வேண்டு மானாலும் நீ வேண்டிய தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கிறேன். எல்லாப் பொருளாதிபதகளுக்கும் இன்றே கட்டளையறிக்கை பிறப்பிதது அனுப்பி விடுகிறேன்" என்றார் மாராயர்.

அரசரின் அன்பான பேச்சும் ஆதரவான செயலும் மணிவண்ணனுக்கு மேலும் ஊக்க மூட்டுவனவாய் இருந்தன.

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மணி வண்ணனைத் தனித்தனியே அழைத்து ஊக்கமுட்டும் சொற்களைக் கூறினர்.

40