பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரென்று துள்ளிப் பாய்ந்தது. திடுக்கிட்டுவிழித்த மணிவண்ணன் எதிரில் சிறிது தூரத்தில் ஓர் அழகிய மண்டபம் இருப்பதைக் கண்டான். காட்டுப் பச்சை நிறத்தின் இடையே வெள்ளை வெளேரென்று தோன்றிய அந்தமணிமண்டபம் மிகமிக அழகாக இருந்தது.

நெருங்கிச் செல்லச் செல்ல பளிங்குக் கல்லால் கட்டப் பெற்றிருந்த அந்த மணிமண்டபம் மேன்மேலும் அழகு பெருகிக் காணப்பட்டது

மண்டபத்தின் அருகில் சென்றவுடன் குதிரையைவிட்டு இறங்கினான் மணிவண்ணன் மண்டபத்தில் யாரிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அவன் திரும்பியபோது எதிரில் இருந்த குளத்தை நோக்கிச் சென்றது குதிரை. அந்தக் குளம் சலவைப் படிக்கற்கள் அமைத்துக்கட்டப் பெற்றிருந்தது. குதிரை அந்தப் படிக்கற்களில் கால் வைத்தவுடன் வழுக்கித் தடுமாறி அந்தக் குளத்திற்குள் விழுந்து விட்டது. தடாலென்று குதிரை விழுந்த ஓசை கேட்டு மணிவண்ணன் ஓடிவந்தான். குளத்திற்குள் இறங்கித் தண்ணிருக்குள் நீந்திச் சென்று குதிரையைப் பிடித்து இழுத்து வந்தான். அதைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து மேலெல்லாம் தேய்த்துத்

47