பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறக்கை இல்லாமலே பறக்கும். நீ நினைத்த இடத்திலே உன்னைக் கொண்டு போய் இறக்கும். சந்திர லோகமானாலும் அதற்கப்பால் உள்ள கந்தருவ லோகமானாலும் அது போய்ச் சேரும். இதை உன் குதிரைக்குப் பூட்டி அந்த மந்திரவாதியின் இருப்பிடத்திற்குப் பறந்து செல்.

"இதோ இந்தப் பொன் முடியை உன் தலையிலே அணிந்துகொள். இதை யணிந்து கொண்டவன் வேறு யாருடைய கண்ணுக்கும் தெரியமாட்டான். இந்திரனானாலும் சந்திரனானாலும் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. இதையணிந்து கொண்டு அந்த மந்திரவாதியின் கண்ணுக்குத் தெரியாமல் அவனை அணுகிச் செல்லலாம்.

"இதோ இந்த வைரவாளை இடையிலே அணிந்து கொள். இதைச் சுழற்றி வீசினால் எதிர்ப்பட்டு நிற்கும் எதிரியின் தலை கழன்று விடும். இவ்வாளால் குத்தப்பட்ட நெஞ்சில் குருதி கொப்புளிக்கும். எப்பேர்ப்பட்ட வல்லமையுடையவனும் இவ்வாளால் தாக்கப்பட்டால் உயிரிழந்து போவான்.

"மகனே இந்த மூன்று பொருள்களையும் உனக்குத் தருகிறேன. இவற்றைப் பயன்

51