பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லேயே நின்று கொண்டிருந்தான். மந்திரவாதி யாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆரூடம் கற்றிருந்தான். ஆரூடம் கணித்துப் பார்த்தால், உலகில் உள்ள எந்த மனிதனைப் பற்றியும் முழுவிபரமும் அறிந்து கொள்ளக் கூடிய சக்தி அவனுக்கு இருந்தது. ஆரூடத்தின் மூலம் யாருடைய உருவத்தையும் அவன் பார்த்துவிட முடியும். ஆனல், ஓம குண்டத்தின் எதிரே உள்ள வட்டப் பலகையில ஏறியிருந்து அரை மணி நேரம் ஆரூடம் கணித்துப் பார்த்த பிறகு தான், மந்திரவாதி இன்னொருவனைப் பற்றிய விபரம் அறிந்துகொள்ள முடியும்.

அதற்கெல்லாம் அப்போது நேரமில்லை.

மணிவண்ணன் அவன் குகைக்குள் ளேயே நுழைந்து விட்டான். மந்திரவாதியையும் கண்டுவிட்டான்.

"அடே, மமதை பிடித்த மந்திரவாதியே உன் வாழ்வுக்கு அந்திப்பொழுது வந்துவிட்டது. இதோ இன்னும் சற்றுநேரத்தில் உன் தலை உருளப் போகிறது. ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் சொல்" என்று ஆண்மை மிகுந்த குரலில் பேசினன் மணிவண்ணன்.

மந்திரவாதி பார்த்தான்.

57