பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநீறு பெற்றுக் கொண்டு எல்லோரும் வெளியில் வந்தார்கள்.

அரசரும் அரசியும் இளவரசியும் இரதத் திலே ஏறிக்கொண்டார்கள்.

இரதம் புறப்பட்டது.

அரண்மனை நோக்கிப் பறந்தது. குதிரைகளைச் சாரதி வேகமாகச் செலுத்தினான்

கோயிலிலிருந்து இரதம் சிறிது தூரம்தான் போயிருக்கும். இடியோசை போன்ற ஒருகுரல் ஒலித்தது. அந்தக் குரல் “நிறுத்து," என்று சாரதியை நோக்கிச் சத்தமிட்டது.

குரலைக் கேட்ட அதிர்ச்சியிலே சாரதியின் உடல் வெடவெடவென்று நடுங்கியது.அவன் கையில் இருந்த குதிரை வார் நழுவிக் கீழே விழுந்தது. குதிரைகள் அரண்டு மிரண்டு அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டன.

அரசரும் அரசியும் இளவரசியும் என்ன நேர்ந்தது என்று தெரியாமல் திகைத்துப் பதைத்து விழித்துக் கொண்டிருந்தார்கள்.

“சாரதி, என்ன சத்தம்?" என்று அரசர் கூவினார்.

சாரதி பதில் பேசவில்லை, பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அவனால் பதில் சொல்ல வாயைத் திறக்கமுடியவில்லை.

7