பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வேதநாயகம் பிள்ளை

தமிழ் படிக்காதவர்கள் தமிழ் நாட்டிலே வசிக்கத் தகுந்தவர் அல்லர். அவர்கள்.எந்த ஊர்மொழியைப் படிக்கிறார்களோ அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடம், ஆங்கிலம் மட்டும் படிக்கிறவர்களை லண்டன் பட்டணத்துக்கு அனுப்புவோம். லத்தீனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சொந்த ஊர் இல்லாத படியால் அவற்றைப் படிப்பவர்களை அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்.

4}.