பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

மாயா விநோதப் பரதேசி

தமயனார் வெளியில் வருவதைவிட சிறைச்சாலையில் இருப்பதே உமக்கு அனுகூலமாக இருக்கும் என்று நீர் சொல்வது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளக்கூடிய சங்கதியாக இருந்தாலும், அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவர் சிறைச் சாலையில் இருந்து இப்போது திருட்டுத் தனமாக வந்திருக்கிறார். ஆதலால், அவர் இனி ஆயிசுகாலம் வரையில் பிறருக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு உம்முடைய தயவு அவருக்கு அவசியம் தேவை. உம்முடைய பண உதவி இல்லாமல், அவர் எங்கே இருக்க முடியும்? சாரதா என்னும் தாசி அவரை விடுவித்திருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர் அவளுக்கு இனி உம்முடைய உதவி இல்லாமல் பணம் கொடுக்க முடியாது. அவர் பணம் கொடுக்காவிட்டால், தாசி அவரை இலட்சியம் செய்யமாட்டாள்; சேர்ந்தாற் போல, ஒரு மாசத்திற்குக் கூட வைத்து சவரகூடினை செய்யமாட்டாள். பிறருடைய தயவினால், மறைந்திருக்க வேண்டிய நிலைமையில் உள்ள சட்டைநாத பிள்ளை இங்கே வந்திருந்தால் கூட, அவர் எந்த அதிகாரத்தையும் வகிக்க முடியாது. உங்களுடைய நிலம் முதலிய சொத்துக்களின் நிர்வாகத்தையும் அவர் நேரில் வகிக்க முடியவே முடியாது. ஆகையால், அவர் உம்மிடத்தில் முன்பு நடந்து கொண்ட மாதிரி லோபித்தனமாகவாவது, அதிகார தோரணையாக வாவது நடந்து கொள்ள முடியாது. அவர் இன்னம் 8 வருஷ காலம் சிறைச்சாலையில் இருந்து வந்தால், அதன் பிறகு அவர் பகிரங்கமாக எல்லா நிர்வாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது அவர் திருட்டுத்தனமாக வந்துவிட்டார் ஆகையால், அவர் இனி தம்முடைய ஆயிசுகாலம் முடிய ஒளிந்திருந்து உம்முடைய தயவினாலேயே ஜீவிக்க வேண்டியவராகிவிட்டார். ஆகையால் 8 வருஷங் கழிந்த பின், உம்முடைய அதிகாரம் போய்விடும் என்ற கவலைகூட இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆகவே, அவர் சிறைச்சாலையில் இருப்பதை விட, வெளியில் வந்ததே, ஒருவிதத்தில் அனுகூலமானது என்பது தெரிகிறதல்லவா. இருந்தாலும், பரவாயில்லை. நான் உம்மை இதற்கு மேல் அதிகமாக இப்போது வற்புறுத்த