பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

129

உங்கள் பேரில் வெறுப்பாவது கொள்ளாமல் செய்து கொள்வோம். பிறகு நாம் நம்முடைய ஆள்களில் முப்பது நாற்பது பேரைக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுகிறது. அவர்கள் எல்லோரும் தக்க பெரிய மனிதர்களைப் போல் ஆடைகள் அணிந்து வரும்படி செய்தால், பார்வைக்கு அவர்கள் நம்முடைய பந்துக்கள் போலவும் சிநேகிதர்கள் போலவும் தோன்றுவார்கள். நானே பூனூல் விபூதிப் பட்டை முதலியவைகளைப் போட்டுக் கொண்டு நாணல்பில், பொரசங்குச்சி முதலிய சாமான்களை எடுத்துக் கொண்டு பஞ்சாங்கக்கார ஐயரைப் போல வருகிறேன். எல்லோரும் உட்கார்ந்து ஆடம்பரமாகக் கலியாணச் சடங்கை நடத்தி முடிவில் அந்தப் பெண்ணைப் பலவந்தமாகக் கொண்டு வந்து மணையில் உட்கார வைப்போம். நான் வாயில் வந்ததை உளறி ஏதோ மந்திரம் சொல்லுகிறது போல பாசாங்கு பண்ணுகிறேன். நீங்கள் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுங்கள். பிறகு நம்முடைய ஆள்கள் எல்லோரும் மெதுவாக வெளியில் நழுவி விடட்டும். அதன் பிறகு நீங்கள் அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் நல்ல வார்த்தையாகவே பேசி முயற்சி செய்யுங்கள். தான் அதற்குமேல் எதையும் செய்ய முடியாதென்ற எண்ணம் அவளுடைய மனசில் உண்டாகிவிடும். அதுவுமன்றி, அதற்கு மேல் தான் வேறே யாரையும் கட்டிக் கொள்ள முடியாது என்ற நினைவும் உண்டாகிவிடும். பிறகு அவள் அநேகமாய்ப் படிமானத்திற்கு வருவாள். பிறகு உங்களுக்குப் பிரியமானால், அவளை எப்போதுமே வைத்துக் கொள்ளுங்கள். அல்லது, கொஞ்ச காலத்துக்குப் பிறகு துரத்திவிட வேண்டும் என்று தோன்றினாலும், அப்படியே செய்துவிடலாம். அவள் உங்களோடு இருக்கும் வரையில், இது இன்ன ஊர் என்ற தகவலாவது, நீங்கள் இன்னார் என்ற விவரமாவது தெரியவே கூடாது. நாம் கடைசியில் அவளை அனுப்பிவிட வேண்டுமானால், இப்போது அவளை எவ்வளவு ரகசியமாகக் கொண்டு வரப் போகிறோமோ அதுபோலவே கொண்டு போய், அவளுடைய தகப்பன் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் விட்டுவிட்டு வந்து விடுவோம். அவளை நீங்கள் அனுப்பும் போது, அவள்மா.வி.ப. I - 10