பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மாயா விநோதப் பரதேசி


கந்தசாமி:- (ஒருவித லஜ்ஜையோடு) உன்மையை உன்னிடம் சொல்லாமல் காரியம் ஆகப்போகிறதில்லை. ஆனாலும், அதை நீ ஒப்புக் கொள்ளாமல் கேலி பண்ணுவாயோ என்று பயமாக இருக்கிறது.

கோபாலசாமி:- சேச்சே உன் விஷயத்தில் நான் என்னுடைய உயிரை வேண்டுமானாலும் கொடுக்கக் கூடியவன் என்பது. உனக்குத் தெரியாதா? நீ ஏதோ யோசனை செய்து, ஒரு காரியம் ஆக வேண்டும் என்று சொல்லும் போது நான் ஒரு நாளும் அதை மறுத்துப் பேசமாட்டேன். நீ அவ்வளவு மூடத்தனமான காரியம் எதிலும் இறங்கமாட்டாய் என்பது எனக்குத் தெரியாதா. பரவாயில்லை; சங்கதியைச் சொல்.

கந்தசாமி- நம்முடைய பள்ளிக்கூடத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து ஷேக்ஸ்பியர் காளிதாசர் முதலிய கவிகளின் நாடகங்களை நடத்தி வேஷங்கள் போட்டு ஆடினோமே. அந்த அனுபோகம் விண்ாய்ப் பேர்கவில்லை. அதை நாம் இப்போது நம்முடைய சுய விவகாரங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

கோபாலசாமி- (அதிகமான ஆச்சரியமும் குதுகலமும் அடைந்து) நீ உண்மையாகப் பேசுகிறாயா, அல்லது வேடிக்கை யாகப் பேசுகிறாயா என்ற சந்தேகமே இன்னமும் என் மனசில் உண்டாகிறது.

கந்தசாமி:- இல்லையப்பா. நான் நிஜமாகவே பேசுகிறேன். அன்றைய தினம் நான் சகுந்தலா வேஷம் போட்டுக்கொண்டு வந்த போது நீ என்னைப் பார்த்து என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா என்னைப் பார்த்தால், தத்ருபம் திபோல இருக்கிற தென்றும் என்னைப் போல ஒரு பெண்ஜாதி உனக்குக் கிடைத்தால், தின்ந்தினம் எழுந்தவுடன் என்னைச் சுற்றி வந்து நூறுதரம் பிரதகவின நமஸ்காரம் செய்வேன் என்றும், உன் ஆயிசு காலம் முடிய எனக்கு அடிமையாய் இருப்பேன் என்றும் நீ சொன்னாய் அல்லவா அதுபோல் உன் பிரியத்தை நிறை வேற்றலாம் என்று நினைக்கிறேன்.