பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

மாயா விநோதப் பரதேசி

என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பார்த்தாள். அவரும், வேலாயுதம் பிள்ளையும், மற்றவரும் மூன்றாவது வகுப்பு வாசற்படி வழியாய் வெளியில் போகாமல், தான் நின்ற இடத்திற்கு அருகில் இருந்த முதல் இரண்டு வகுப்புப் பிரயாணிகள் வெளியேறும் வழியை நோக்கி வந்து கொண்டிருந்தது அவளுக்குத் தெரிந்தது. தான் அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்பது உசிதமல்ல என்று தீர்மானித்துக் கொண்ட அந்த மடந்தை அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு விரைவாக நடந்து பக்கத்தில் இருந்த வாசலின் வழியாக வெளிப் பட்டுப் போய்த் தனது பெட்டி வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து பங்களாவிற்கு அவசரமாய் ஓட்டும்படி வண்டிக்காரனிடம் கூற, அவன் உடனே வண்டியை ஓட்டிக் கொண்டு போக, ஐந்து நிமிஷ நேரத்தில் அது மறைந்து போய்விட்டது.

இரண்டாம் பாகம் நிறைவடைந்தது