பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

45

விளங்கும் மகாத்மா காந்தியைப் போல ஆக வேண்டும் என்பதையே புருஷார்த்தமாகக் கொண்டவர்கள். வெள்ளைக்காரர்களோ உலகத்தில் உள்ள செல்வத்தையும், பூமியின் கீழுள்ள வைரம், தங்கம், முதலிய நவரத்னங்களையும், மருந்துக்கற்கள், மண்கள், எண்ணெய்கள் முதலிய பொருட்களையும், கடலிலுள்ள மீன்கள், முத்துக்கள், பவழங்கள் முதலிய அரிய பொருட் களையும், ஆகாயத்தில் உள்ள மின்சாரம் முதலிய அரியபெரிய சக்திகளையும், காட்டில் உள்ள மரங்களையும், விலங்குகளையும், மலையில் உள்ள கற்களையும், வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும், நிலம், நீர், ஆகாயம் ஆகிய எல்லாவற்றிலும் செல்லும் உரிமையையும், இன்னும் இவ்வுலகத்தில் உள்ள இது போன்ற அநந்தமான சம்பத்தையும் அடைந்து, தாமும், தமது சந்ததியாரும் என்றும் சிரஞ்சீவியாக இருந்து ஆண்டு அனுபவித்துக் கொண்டு, ராக்பெல்லர் முதலியவர்களைப் போல குபேரசம்பத்துடையவராய் இருப்பதே அவர்கள் புருஷார்த்தமாகக் கொண்டவர்கள். அவர்கள் இப்போது இந்த பூலோகம் முழுதையும் கைப்பற்றி அவற்றை உருண்டை யாகச் செய்து ஒரு காகிதத்தில் எழுதித் தங்களுடைய சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நினைத்துக் கொண்டால், அவர்கள், புறக்கடைக்குப் போவதுபோல, உலகத்தின் இன்னொரு புறத்துக்குப் போய் விடுகிறார்கள்; ஆயிரக் கணக்கான மைல் துரத்தில் இருக்கும் தேசங்களை அடக்கி சுயேச்சையாக அடக்கி ஆண்டு வருகிறார்கள். இது போதா தென்று, அவர்கள் இன்னும் ஆகாயத்தில் உள்ள நவக்கிரகங்களை எல்லாம் துார திருஷ்டிக் கண்ணாடியால் பார்த்து, அங்கே மனிதர்களும், தரிசு நிலங்களும், மலைப்பிரதேசங்களும் இருப்பது தெரிவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆகாய விமானங்கள் இன்னும் அதிக திறமை யாக மேலே பறந்து போகும் காலத்தை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது ஓர் இஞ்சிநீர் தோன்றி, புதிய மாதிரியான ஆகாய விமானம் ஒன்று கண்டு பிடித்து விட்டால், அவர்கள் அதன் மூலமாகப் பறந்து போய் நவக்கிரகங்களை அடைந்து அங்கே உள்ள அநாகரிகர்களான சுதேசிகளை அப்புறப்படுத்தி விட்டு,