பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

57

அப்படி நேரிடுமானால், நம்மவர்கள் வெள்ளைக்காரரைப் போலக் கலியாண விடுதலைச் சீட்டு வாங்க நியாய ஸ்தலத்திற்குப் போக முடியுமா? அல்லது, அவர்கள் ஒரு புருஷரைவிட்டு இன்னொரு புருஷரைக் கலியாணம் செய்து கொள்வதுதான் சாத்தியமாகுமா? வெள்ளைக்காரர் எல்லோரும் பொருள் தேடுவதற்குத் தக்கபடி சகலமான வசதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஸ்திரீகள் உத்தியோகம் வகிப்பதில் அவர்களுடைய கற்புக்கு பங்கம் வரலாம் என்பது தெரிந்தும் அவர்களை விலக்கி வேறே கலியாணம் செய்து கொள்ளலாம் என்று சட்டங்களும் நியாய ஸ்தலங்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் விலக்கப்படும் ஸ்திரீகளும் சமூகத்தார் அறிய பகிரங்கமாகவும் கண்ணியமாகவும் வேறொருவனைக் கலியாணம் செய்து கொள்ளலாம் என்றும் நியதி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்களுடைய ஸ்திரீகள் இங்கிலிஷ் படித்து வெளியில் போய் உத்தியோகம் வகிப்பதாலும், தங்களுடைய கற்பை இழப்பதாலும் அவ்வளவாக பாதிக்கப் படுகிறதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் பிடிக்காவிடில், தமது பிரியப்படி வேறே கலியாணம் செய்து கொள்ளலாம். நம்மவர்கள் அப்படிச்செய்ய, நமது பழக்க வழக்கங்களும் சாஸ்திரங்களும் இடந்தரவில்லை. நம்முடைய ஸ்திரீ இங்கிலிஷ் படித்து உத்தியோகம் பார்க்கப்போய், அவ்விடத்தில் ஓர் ஆடவனால் கெட நேர்ந்ததானால் அவளை அவளது சொந்தக் கணவன் தள்ளி வைத்து விடுவான். அவளுக்கு ஏற்பட்ட கள்ள நாயகன் அவளை பகிரங்கமாக ஸ்வீகரித்துக் கொள்ளலாம். ஆனாலும், அவர்கள் சமூகத்தார் அறிய புருஷன் பெண்ஜாதி என்ற கண்ணியமான சம்பந்தத்தோடு வாழமுடியாமல் போவது நிச்சயம். அந்த ஸ்திரீ தனது கற்பை இழந்து எடுபட்டுப் போனவள் என்ற தூஷணைக்கும் களங்கத்திற்கும் தனது ஆயிசு கால பரியந்தம் இலக்காக வேண்டும். அவளையும் அவளது கள்ள நாயகனையும் ஜனசமூகத்தார் சாஸ்திரீகமான தம்பதிகளாக ஒருநாளும் மதிக்கவே மாட்டார்கள். நம்முடைய ஸ்திரீகள் இங்கிலீஷ் கற்று உத்தியோகம் வகிப்பது முதலில், குடும்ப ஒற்றுமை, பரஸ்பர வாஞ்சை, குடும்ப சுகம் முதலிய கெட்டு