பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

63

மனப்பான்மை உண்டாக்கி, அவர்களையே குடும்பத்தின் முக்கியமான நிர்வாகிகள் ஆக்குவது ஒரு நாளில் சாதிக்கக்கூடிய காரியமல்ல. இளம்பிராயத்தில் இருந்தே அவர்களை அவர்களது பெற்றோர் அதே துறையில் பழக்கி, அதற்கு அனுகூலமான நூல்களை மாத்திரம் அவர்கள் படிக்கும்படி செய்ய வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ள உத்தமமான குணங்கள் நிறைந்த குடும்ப ஸ்திரீகள் நடந்து கொள்ளும் தோரணையை அவர்கள் கவனிக்கும்படி செய்ய வேண்டும். துன்மார்க்கங்களும், துராசாரங்களும், துஷ்ட கிருத்தியங்களும் நிறைந்த ஸ்திரிகளின் குணாதிசயங்களைக் காட்டும் அன்னிய பாஷையின் நூல்களை அவர்கள் படிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் தடுப்பதற்கு, அவர்கள் அந்த பாஷையையே கற்காமல் தடுத்துவிட வேண்டும். இத்தனை காரியங்களையும் நாம் ஜாக்கிரதையாக செய்தால்தான் நமது ஸ்திரீகள் பழைய காலத்து ஸ்திரீகள் போல உத்தம குண ஸ்திரீகளாக இருப்பார்கள். அப்படி இன்றி, அன்னிய நாட்டு அநாகரிக விஷம் முற்றிலும் பரவி நிலைத்து வேரூன்றி விடும்படி செய்த பின்னர், இனி இவளைத் திருத்தி நல்வழிப்படுத்துவது முற்றிலும் அசாத்தியமான காரியம். என் மனப்போக்கிற்கும் இவளுடைய மனப்போக்கிற்கும், கொஞ்சமாவது ஒற்றுமை ஏற்படும் என எனக்குத் தோன்றவே இல்லை. நான் இவளைக் கலியாணம் செய்து கொண்டு இவளிடம் என்னவிதமான இன்பத்தை அடையப் போகிறேன்? அநேகமாய் ஒன்றும் இராதென்றே நினைக்கிறேன். இவள் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துவதை இழிவாக மதிக்கக் கூடியவள். சமையலறையில் புகுந்து அவ்விடத்து அலுவல்களைச் செய்து மாதுரியமான போஜனம், சிற்றுண்டிகள் முதலியவைகளைத் தயாரித்து ஆண்மக்களுடைய மனதை மகிழச் செய்வதற்கு இவள் முற்றிலும் திறமையற்றவள். இவள் தேகப்பிரயாசையை விலக்கி, உட்கார்ந்த இடத்திலேயே இருந்தபடி பரீட்சைக்காகப் படித்துப் படித்து உடம்பின் செழுமையையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டிருப்பதால், இன்னம் சில வருஷங்களில் இவள் கிழவி போல ஆகிப் பலவித நோய்களுக்கு இருப்பிடமாய்ப் போவது நிச்சயம். அதுவுமன்றி, இவள் கல்லாத