பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

93

சந்தோஷமாக சில தினங்கள் இருந்தபின், துரத்திவிட்டால், ஒழிந்து போகிறாள். நீங்கள் இவளை உண்மையிலேயே கலியாணம் செய்து கொண்டதாக இவள் எண்ணிக் . கொண்டிருப்பது உங்களுக்கு முற்றிலும் அனுகூலமான காரியமே அன்றி வேறல்ல. ஏனென்றால், நீங்கள் இன்றைய தினம் கிரமப்படி சாந்தி முகூர்த்தத்தை நிறைவேற்றுவதற்கு, இவள் எவ்வித இடக்கும் செய்யாமல் உங்களோடு மனம் ஒத்து நடந்து கொள்வாள் அல்லவா?

மாசிலாமணி:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து) ஆம். வாஸ்தவம் தான். நீர் சொல்லுகிறபடி தான் செய்ய வேண்டும். இருந்தாலும் நாம் இவளை இந்த வீட்டில் அதிக காலம் வைத்திருப்பது சரியல்ல. அடிக்கடி போலீஸ் நாய்கள் வந்து பார்த்து விட்டுப் போகின்றன. இந்த விஷயங்களில் எல்லாம் சுலபத்தில் மோப்பம் பிடிக்கும் திறமை அவர்களுக்கு அதிகமாக உண்டு. அதுவுமன்றி, நம்முடைய ரமாமணிக்கும் இது பிடிக்காது; கலெக்டரிடம் நமக்குள்ள ஆத்திரத்தைக் கருதிப் பழிதீர்த்துக் கொள்வதற்காக நாம் மனோன்மணியம்மாளைக் கொண்டு வந்து இப்படிப்பட்ட மோசடியான கலியாணம் நடத்துகிறோம் என்றும், அவளை வெகு சீக்கிரத்தில் அனுப்பி விடுவோம் என்றும், ரமாமணி நினைத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது நாம் படித்த சமாசாரப் பத்திரிகை அவளுக்கு வருகிறது. அவள் இந்தச் சங்கதியை எப்படியும் தெரிந்து கொள்வாள். இவள் மனோன்மணியல்ல என்பதும் அவளுக்கு உடனே தெரிந்து போகும். ஆகவே இவளை நான் இவ்விடத்தில் அதிக காலம்' வைத்திருப்பதையாவது, இவளிடம் நான் அன்னியோன்னியமாக இருப்பதையாவது கண்டு, அவள் சகித்திருக்கவே மாட்டாள். அவளுக்கு நம்முடைய ரகசியங்களில் பல தெரிந்து போயிருப்பதால், அவளுடைய பகைமையைச் சம்பாதித்துக் கொள்வது உசிதமான காரியம் அல்ல. ஆகையால் இவளை நான் இரண்டொரு தினங்கள் இங்கே வைத்திருந்து, நமது: இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொண்டு ரகசியமாகத்