பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235 லப்பைத் தெருவில் ஒளிந்து இருந்து வருகிறார் என்பது மூன்று வகையில் பரிஷ்காரமாக ருஜூவாகி இருக்கிறது. இதுவரை நேரில் பார்த்து இவரோடு நன்றாய்ப் பழகியவர்களும், இவருடைய அங்க மச்ச அடையாளங்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர் களுமான சிறைச்சாலை உத்தியோகஸ்தரும், வார்டர்களும் இவர் சட்டைநாத பிள்ளையைப் போலவே இருப்பதாகக் கூறுகின்றனர். இவர் மகம்மதிய உடைகள் தரித்திருப்பதால், அவரைப் போலவே இருக்கிறார் என்று சொல்ல முடியுமேயன்றி, அவர்தான் என்று சொல்லுவது சாத்தியமான காரியமல்ல. இவருடைய மகம்மதிய உடைகளை விலக்கிவிட்டு, சட்டைநாத பிள்ளையின் உடைகளை இவர் அணிந்து கொண்டிருந்தால், இவர் தான் சட்டைநாத பிள்ளை என்று சாட்சிகள் நிச்சயமாகச் சொல்லி இருப்பார்கள்! இவர் தம்முடைய உடைகளைக் கொஞ்ச காலம் மாற்றிக்கொள்ள மறுப்பதன் உள்கருத்தை நியாயாதிபதி அவர்கள் அவசியம் கவனிக்க வேண்டும். இரண்டாவது இவர் சுயேச்சையாக இருந்த காலத்திலும், சிறைச்சாலையில் இருந்த காலத்திலும் எடுக்கப்பட்ட இவருடைய போட்டோப் படங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக் கின்றன. அவைகளையும் இவரையும் கோர்ட்டார் ஒத்திட்டுப் பார்ப்பதொன்றே போதுமானது. அதைத் தவிர, இதற்கு வேறு எவ்வித சாட்சியமும் தேவையே இல்லை. இந்த இரண்டுவித சாட்சியங்களைவிட முக்கியமானதும், நிச்சயமானதும் ரேகை அடையாளம். ரேகை சாஸ்திர நிபுணர் அந்த விஷயத்தை நன்கு ஆராய்ச்சி செய்த மகா கெட்டிக்காரர். அவருடைய சாட்சியத்தை அசட்டை செய்வதற்கு ஏதுவே இல்லை. அந்த சாஸ்திரம் உபயோகமற்ற தென்று இவ்வளவு சுலபத்தில் நாம் அசட்டை செய்து விட்டால், எத்தனையோ லட்சக் கணக்கில் பணத்தொகை செலவு செய்து, அந்த இலாகாவை ஏற்படுத்தி இருக்கும் இங்கிலீஷ் துரைத்தனத்தாரை நாம் முட்டாள்கள் என்று சொல்வது போலாகும். பல வருஷகாலமாக அந்த இலாகா ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு கைதி இதற்கு முன் எத்தனை தடவை தண்டனை அடைந்திருக்கிறார் என்பதை இந்த ரேகை சாஸ்திரத்தி னாலேயே இதுவரையில் நிர்ணயித்து வந்திருக்கிறார்கள். ஒரு குற்றத்திற்காக ஆறுமாத காலம் தண்டனை அடையக்கூடிய