பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்ப்டுத்தும் என்னங்கள் 35

தாஜ்' என்று இந்த முதியவர் மார்ட்டின் க்னதைத்தேற்றி ஆறுதல் கூறினார்!

சான்றோரின் ஞானவாக்கு என்றும்.கொய்க்காது என் அதற்கேற்றவாறு, மார்ட்டின் நேரம் ஆக ஆக தன்னை உணர்ந்து உடல் தேறிக் கொண்டே வந்தார்: லூத்தர் சுகமடைந்தார் மரணம் தனது முதல் தோல்வியை மார்ட்டினிட்ம் சந்தித்தது அவரைச் சூழ்ந்திருந்த அனை வரும் ஆனந்தக் கண்ணிர் விட்டார்கள்.

அன்று முதல் மார்ட்டின், அன்னானையும், சாமு வேலையும் விட மிக அதிகமாக ஜெபத்திலும், மார்க்கப் பக்தியிலும் ஈடுபட்டார்! கர்த்தர் தொண்டே நம்மை வாழ்விக்கும் அருள் என்று நம்பி, தொடர்ந்து இறை நெஞ்சம் கொண்டார்.

இந்த பயங்கர நோயிலே இருந்து உயிர் மீண்ட மார்ட் டின், தனது பெற்றோரைப் பாரித்துவிட்டு, சிறிது காலம் உடல் நலம் தேற்றி ஓய்வெடுத்துக் கொண்டு வரலாம். என்று தன்தாய் தந்தையர் வாழும் ஊருக்குப்புறப்பட்டார்!

அக்காலத்தில், ஊர் பயணம் செல்பவர்கள். தனது துணைக்காக, பாதுகாப்புக்காக, ஓர் உடைவாளை உடன் எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு அதன்படி மார்ட்டி னும் ஓர் உட்ைவாள்ை எடுத்துக்கொண்டுச் சென்றார்:

ஆந்த் வாளை லூதர் கைதவறிப் பிடித்ததால், தவறி விழுந்துமார்ட்டின் கால் நரம்பை வெட்டி வீழ்த்திவிட்டது. ஆதனால் அவருக்கு அதிக அளவில் ரத்தம் பெருக்கெடுத் தது. உடனிருந்த நண்பன் மருத்துவரை அழைத்து வர ஓடினார்: மார்ட்டின் உடல் உபாதை அதிகமானது: ரத்தமும் நிற்கவில்லை. வலியும் தாங்க முடியாமல் அலறி அலறி அழுதாரி1

இரத்தம் நிற்காமல், வந்து கொண்டே இருப்பிதைப் பார்த்த மார்ட்டின்; இந்தத் தடவை நாம் நிச்சயமாகச்