பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மார்ட்டின் லூதர்


அவன் வெளியில் பகிரங்கமாக மக்களிடம் சொல்ல முடியவில்லை.

மக்கள் சபை பலமுறை கூடியது. ப்ராடெஸ்டெண்டுகள் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கொள்கைகளை சேர்லெஸ் ஒப்புக்கொள்ளவில்லை. Protestant League என்ற சங்கந்தான் மதச் சண்டையை நடத்தியது. தன் அடக்க முடியாக பரிதாபத்தால் பல முறை வெளியே ஓடிவந்து மக்களை நேரடியாகச் சந்தித்து, ஆயுதத்தைக் கீழே வைக்கும்படிக் கேட்டுக்கொள்ளலாமா என்று லூதர் துடியாய்த் துடிப்பான். ஆனால் நண்பன் இவனை விடுவதில்லை. "ஓர் உண்மைக் கருத்து நாட்டில் பரவிய போதெல்லாம் இப்படித்தான் ரத்த ஆறு ஓடியிருக்கிறது." ஆனால் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் நீடித்து நடப்பதில்லை. சில நாட்கள் கடந்து இறுதியில் ஓர் நல்ல முடிவை அடையும். அதுவரைதான் மறைவாயிருப்பது நல்லதென அடிக்கடி எச்சரித்து வந்தான். ஆனால் வன்மைமிக்க அவன் உடல் நலிந்துவிட்டது. அந்த சிந்தனைச் சிற்பியின் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

இதற்கோர் முடிவே கிடையாதா? என்ற ஏக்கத்திலேயே தூக்கத்தை மறந்தான். உடல் நலம் மேலும் குன்றியது தான் பெறுதற்கரிய பெருந்தனமாகவே இவனைக் கருதி போஷித்து வந்தான். எனினும், அன்றாடம் மக்கள் மதச் சண்டையிலே மாறும் எண்ணிக்கையைக் கேட்டுக் கேட்டு பெரு மூச்சுவிட்டான்.