பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு 125.

ஆதலால் அன்னையும் அப்பனும் உரிய பாதுகாப்பான இடம் இதுவென்று அவனை அடியார்கள் நடுவில் இருக்கப் பண்ணி, அப்பால் அவன் தலைமேல் தம் பத்மபாதத்தைப் பதிக்கிரு.ர்கள். - r -

മ്ലങ്ങുഖ് திருவருளால் நல்லோர் இணக்கம் அமைந்து, அந்தச் சார்பினால் இறைவன் திருவருட்பதிவும் அதல்ை ஆனந்த அநுபவமும் ஒருவனுக்கு உண்டாக வேண்டும். இதையே அழக்ாக அபிராமிபட்டர் சொல்கிரு.ர்.

குவளைக்கண்ணியும் அவளுடைய செய்ய கணவரும் ஒருங்கே நம்பொருட்டால் இங்கே வடிவுகொண்டு எழுந் தருளினர்கள். நம்மை அடியார்கள் நடுவிருக்கப் பண்ணி னர்கள். பிறகு தம் பத்மபாதத்தை நம் சென்னியின்மேல் பதித்தார்கள். இதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்! என் நெஞ்சமே, நாம் அந்தப் புண்ணியத்தைச் செய்திருக்கிருேம்' என்று பெருமைப்படுகிரு.ர்.

புண்ணியம் செய்தன மே,மன

மே.புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும்

கூடி,நம் காரணத்தால் நண்ணிஇங்கேவந்து தம் அடி யார்கள் நடுஇருக்கப் பண்ணிகம் சென்னியின் மேற்பத்ம

பாதம் பதித்திடவே,

மனமே, அப்போது மலர்ந்த புதிய குவளைப் பூவைப் போன்ற திருக்கண்களையுடைய அபிராமியன்னையும், அவ் வன்னையின் செம்மை வண்ணமுடைய கணவராகிய சிவபிரானும் சேர்ந்து, நம்மை ஆட்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினல், நாம் இருக்கும் பிரபஞ்சத்தை