இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நடம் கொண்ட நாயகி 133
பட்டது. வேதப்பரிபுரை, நலங்கொண்ட நாயகி' என்று கூட்டிப் பொருள் செய்யவேண்டும். -
அருளே வடிவாகிய எம்பெருமாட்டியின் வசப்பட்டு இறைவன் ஆடுகிருன் என்றது, பராசக்தியின் இயக்கத்தால் சிவம் எனும் பொருள் இயங்குவதைக் குறிப்பது. .
சிருஷ்டி முதலிய பஞ்சகிருத்தியங்களும் சிவபெருமா னுடைய அருளின் இயக்கத்தால் நிகழ்வன என்ற க்ருத்தையே இது காட்டுகிறது.
இடம்கொண்டு விம்மி இணைகொண் டிறுகி
இளகிமுத்து - வடம்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர்
வலியநெஞ்சை நடம்கொண்ட கொள்கை நலம்கொண்ட நாயகி,
நல்லரவின் படம்கொண்ட அல்குற் பனிமொழி வேதப்
பரிபுரையே
இது அபிராமி அந்தாதியின் 42-ஆம் பாட்டு.