பக்கம்:மாவிளக்கு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு ஒரு மணி 1 I 3

கொடுக்கும் விஷயமாகமட்டும் அவர் பாரத சேவைக் கழகத்துடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண் டிருகதாா.

" சில நாட்களுக்கு முன்பு அக்கழகத்தில் சம்பந்தப் பட்ட சிலர் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அது விஷயமாகக் கழகக் காரியாலயத்தைச் சோதனை செய்தபொழுது என் தகப்பனர் எழுதிய மூன்று கடிதங்கள் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்குக் கிடைத்து விட்டன. அவைகளே வைத்துக்கொண்டு இவர் என் தந்தையைப் பயமுறுத்துகிருர்.

" என் தந்தையோ புரட்சி இயக்கம் என்ருலே வெறுப்பவர். காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவமே சுயராஜ்யம் அடையும் வழி என்பதோடு அதுவே மக்கள் அனைவரும் என்றும் கைக்கொள்ளவேண்டிய சிறந்த கொள்கையாகவும் இருக்கவேண்டும் என்ற என்ன முடையவர் அவர் புரட்சி இயக்கத்தினர் சம்பந்தப்பட் டிருக்கிருர்கள் என்று கொஞ்சம் சந்தேகப்பட்டிருக் தாலும் அவர் இவ்வியக்கத்திற்கு எவ்வித உதவியும் செய்திருக்கமாட்டார். அதோடு கழகத்தை வெளிப் படையாகவும் கண்டித்திருப்பார்.

இப்பொழுது இவர் என் தந்தையைப் பத்தாயிரம் ரூபாய் கேட்கிருர் ; கொடுக்காவிட்டால் வழக்கில் சேர்த்துவிடுவாராம். அந்த மூன்று கடிதங்களும் இவருக்குத் தக்க ஆதாரங்களாக இருக்கின்றன. புரட்சி இயக்கத்திற்குப் பண உதவி புரிந்ததற்காக என் தந்தை யைப் பத்து வருஷத்திற்குக் கூடத் தண்டிக்கலாமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/115&oldid=616220" இலிருந்து மீள்விக்கப்பட்டது