இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூன்று மணி
முன்ரும் வகுப்பு மாணவர்கள் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிருர்கள். ஐந்தாறு கணக்குகளைக் கரும்பலகையில் எழுதி வைத்துவிட்டு ராமசாமி வாத்தி யார் யோசனையில் ஆழ்ந்திருக்கிரு.ர்.
அது ஒரு ஆரம்ப பாடசாலே. மொத்தம் ஐந்து வகுப் புக்கள் உண்டு. நான்காவது, ஐந்தாவது வகுப்புக்கள் தலைமையாசிரியரின் பொறுப்பில் பக்கத்து அறையில் கடந்தன. முதல் மூன்று வகுப்புக்கள் ராமசாமி வாத்தி யாரின் பொறுப்பு. ஒரே அறையில் அந்த மூன்று வகுப்புக்களையும் வைத்து ஏக காலத்தில் அவர் சமா ளிக்க வேண்டும். அதற்குத் தகுந்தவாறு அவர் படிப்புக் கால அட்டவணை வகுத்திருந்தார்.
மாலேயிலே மூன்ரும் வகுப்புக்குக் கணக்குப் பாடம் வரும்போது முதல் வகுப்பு வெளியே சென்று மரத் தடியில் கின்றுகொண்டு, ஒன்று, இரண்டு, மூன்று