பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

உதவியது. இந்த முறை இப்பொழுது இல்லாததால் எங்களது குறைபாடுகளை முறையீடு செய்வதில் மிகுதியான சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கும்பெனியாருக்கு பாரபட்சமற்ற நீதி வழங்கும் பெருமை உண்டு. ஆனால் கும்பெனியாரது ஊழியர்களின் தவறான நடத்தையினால் அந்த நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு இருக்கிறது. தங்களிடம் சமர்ப்பிக்கப்படும் இந்த முறையீடு பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் இவைகளை இங்குக் குறிப்பிடுகிறேன். இதன்மூலம் என்மீது பழி ஏற்படுமானால் எனக்கு தாங்கள் எத்தகைய தண்டனை வழங்கினாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனினும், எனது கடமையிலும் கும்பெனியார்பால் கொண்டுள்ள தோழமையிலும் நான் தவறிவிட்டதாக எனது செயல்பாடுகள், எனது நடத்தைப்பற்றி பழி ஏற்படுத்துவதற்கு உதவினால் எனது துரதிர்ஷ்டத்தைத்தான் நொந்து கொள்ள வேண்டியதாக இருக்கும்.

எனது சீமை காடுகள் நிறைந்தது. நாடோடிகள், தெற்கிலிருந்து வடக்கிலும், மேற்கே கர்நாடகத்திற்கும், தஞ்சாவூர் சிமைக்கும், செல்வதற்கு சாலை வசதிகள் கிடையாது. அவர்கள் அனைவரையும் நோட்டமிட்டு வருவதும் இயலாத காரியம். அவர்களுக்கு எப்பொழுதும் நான் புகலிடம் அளிக்கவில்லை. வாய்ப்புகள் எற்படும் பொழுது நானே அவர்களைப் பிடித்துக் கொடுத்து இருக்கிறேன். இதனால் தங்களது பாராட்டுதலைப் பெற்று, நிரந்தரமான மகிழ்ச்சியை அடைவது என்பது எனது ஆசை. தாங்கள் அனுமதி அளித்தால் தங்களை நேரில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

பாஞ்சைப்பாளையக்காரர். தமது தவறான நடத்தைமூலம் மற்றவர்களையும், ராஜவிசுவாசமற்ற நிலையில் ஈடுபடுத்துவதற்காக சில கடிதங்களை எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை யில், சில பாளையக்காரர்கள், அந்தக் கடிதங்களுக்கு ஒப்புதல் அளித்து. அவருக்கு சில ஆட்களையும் வெடிமருந்துப் பொதிகளையும் கொடுப்பதாக வாக்களித்து உள்ளனர். ஆனால் இவை பாளையக்காரர்கள் மீது பொதுவாக சந்தேகங் கொள்வதற்குரிய கண்டுபிடிப்பு என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம். கலெக்டரது கடுமையான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், இன்னும்