பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


ஆகஸ்டு - முப்பதாவது நாள்

காலையில் நமது முன்னேற்றத்தைத் தடுக்க எதிரிகள் சாலைக்கு வந்துவிட்டனர். கட்டுப்பாடு இல்லாத அந்தக்காட்டு மிராண்டிகள்! அவர்களால் எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்தனர். கண்மாய்க்கரையில் கூடிநின்று எங்களது போக்கினைத் தடுத்தனர். ஒரு அணியினரை அடித்து துரத்தியவுடன் இன்னொரு அணியினர் வருவர். அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட தாக்குதலுக்குக் குறைவாகவே அவர்களது வேகம் இருந்தது. இப்பொழுது எங்களுக்கு நமது முந்தைய எதிரிகளான கட்டபொம்மு நாயக்கரும் அவரது ஊமைத்தம்பியைப் பற்றிய நினைவு தான் வந்தது.

அவர்களது எண்ணிக்கையும் அந்தப் பகுதியைப்பற்றிய அவர்களது துல்லியமான அனுபவமும் நம்மைவிட அவர்களுக்கு மிகவும் அனுகூலமானவையாகும். புதிய தளவாடங்களைக் கொண்டு நமது அணிக்கு மருது சேர்வைக்காரர்களுக்குப் பதிலாக நியமனம் செய்யப்படவிருக்கும் புதிய தலைவரான உடையாத் தேவரையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருந்தது. ஸ்காட்லாந்து நாட்டு அணி முன்னோடி அணியாகச் சென்றது. பிரதான பொறுப்பு அவர்களுக்குத்தான். அடுத்து பின்னால் நமது பிரிவு சென்றது. விடிகாலையில் இருந்து, சிறுவயல் போய்ச் சேர்ந்த பிற்பகல் பன்னிரண்டரை மணிவரை, அவர்கள் தொடர்ந்துபோரிட்டுக் கொண்டு சென்றனர். நமது அணியினர் எதிரியைக் கண்ணுற்ற பொழுது அவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தாலும் அவர்களைத் தாக்குவதும் அவர்கள் ஓடிவிடுவதும் இயல்பாக இருந்தது. தங்களது பீரங்கிகளை, நாம் கைப்பற்ற இயலாதவாறு மிகுந்த அக்கரையுடன், பாதுகாத்துக் கொண்டனர். மோதல்கள் தவிர மற்ற சமயங்களில் அவர்களது சுடுதல் கடுமையாக இல்லை. அவர்களால் கொல்லப்பட்டும் காயமுற்றவர்களும் நாற்பது அல்லது ஐம்பது பேர்களுக்கு மேல் இராது. அவர்களது ஆயுதம் பீயூட்டர் கம்பியினால் செய்யப்பட்டு இருந்ததால், அதிகமான காயம் ஏற்படுத்தவில்லை.

மாலையில், இந்தச் சீமையின் புதிய அரசரான உடையாத் தேவர், மரியாதை நிமித்தமாக கர்னல் அக்கினியூவைச் சந்தித்