பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

எத்துணையோ போர்களை வெற்றி கொள்ளத் திட்டம் தீட்டி பரங்கியருக்கு வெற்றியைத் தவறாது கிட்டச் செய்த மிகச்சிறந்த கும்பெனித் தளபதியான அக்கினியூவின் எதிர்பார்ப்புகள் முதலும் இறுதியுமாக தோல்வியுற்றது இந்த அரண்மனை சிறுவயல் காட்டுப் போரில்தான். போரைத் துவக்கிய அவன் முப்பத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வேறு வழி இல்லாமல், தலையைக் கவிழ்ந்து கொண்ட தனது போர் வீரர்களது அணியை ஒக்கூர் பாசறைக்குப் பின்னடையுமாறு கட்டளை இட்டான்.[1] அவனது இராணுவப் பணியில் இதைவிட இழிவான நடவடிக்கையை அவன் மேற்கொண்டது கிடையாது.


  1. Military Consulations vol. 288, (20-10-1801) pp. 6837-39 and Revenue Consulations vol. (1801) p. 1401-08.