பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


படைமாத்துார் ஒய்யாத்தேவர், ஆங்கிலக் கும்பெனியரது பிள்ளை! ஆம், ஏற்கனவே வங்காளத்திற்கு மீர்காஸிம், கள்ளர் சீமைக்கு புதுக்கோட்டை தொண்டமான், நெல்லைச் சீமைக்கு எட்டப்பன், இப்பொழுது மறவர் சீமைக்கு ஒய்யாத்தேவர். பொருத்தமான பிறவிகள்! அன்னிய ஏகாதிபத்தியத்திற்கு தொண்டு ஊழியம் செய்வதையே இலட்சியமாக, பிறவிப்பெரும் கடமையாக கொண்ட தொங்கு சதைகள், பிறந்த பொன்னாட்டின் பெருமையை மறந்து, சிறுமைத்தனமாகிய சுயநலத்தையே ஜீவியமாகக் கொண்டிருந்த இந்தசமுதாய விரோதிகளை ஊக்குவித்து, வளர்த்து, உருவாக்கும் உத்தியை கும்பெனியார் மட்டும்தான் தெரிந்து வைத்து இருந்தனர். இது அவர்களுக்கு கைவந்த கலையாகும்.