பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள்முன் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம். மாடக் குச்சித்திரமும், மாநகருக்குக் கோபுரமும் போன்று, இந்த நூலின் மகுடமான அணிந்துரையை நல்கிய தமிழ்முனிவர் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கட்கும், சிறப்புரை வழங்கியுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். திரு. கோ. விசைய வேணுகோபால் அவர்கட்கும், எங்களது நன்றிக் கடப்பாட்டினை பணிவுடன் புலப்படுத்திக் கொள்கிறோம்.

மற்றும், இந்தப் பணியில், எங்களது ஆர்வத்திற்கு ஆதரவாக இந்த அரிய நூலினை மிகக்குறுகிய காலத்தில் அழகுப் பெட்டகமாக அமைத்து, அச்சிட்டு, உதவிய மதுரை பரணி அச்சக உரிமையாளர் திரு. ந. அரியதம்பி அவர்கட்கும் அவரது அச்சகப் பணியாளர்களுக்கும் எங்களது ஆழிய நன்றி.

ஷர்மிளா பப்ளிடிைர்ஸ்

24 - 10 - 1989 இராமநாதபுரம்.