பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

அக்கினியூவின் அந்த ஆலோசனையை கும்பெனித் தலைமை அப்படியே ஏற்றுக் கொண்டது. திருநெல்வேலி, மதுரை இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள், குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப் பறித்துக் கைப் பற்றும் பணியில் ஈடுபட்டனர். சிவகங்கைச் சீமையில் இந்தப் பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய சிவகங்கை ஜமீன்தார் நியமனம் செய்து இருந்தார்.[1] பரங்கிகளது திட்டத்தின் வெற்றியைக் குறிப்பதுடன் அந்தச் சீமை மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் இருந்தனர் என்பதையும் புலப்படுத்துகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பரங்கிகளது திட்டத்தின் வெற்றியைக் குறிப்பதுடன் அந்தச் சீமை மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் இருந்தனர் என்பதையும் புலப் படுத்துகின்றன.

16-1-1802ம் தேதிய அறிக்கையில் கண்டுள்ளபடி[2]

ஆயுத வகை நெல்லைச் சீமை சிவகங்கைச் சீமை இராமநாதபுரம் சீமை மொத்தம்
1. மஸ்கட் 1602 1050 457 3109
2. மஸ்ஸில்லோடிங் துப்பாக்கி 686 570 1256
3. கைத்துப்பாக்கிகள் 815 19 834
4. வால்பீஸ் 152 40 192
5. ஜிஞ்சாலி (பீரங்கி) 3 6 9
6. நீண்ட ஈட்டிகள் 2300 1900 4200
5558 1050 2992 9600
21-2-1802ம் தேதிய அறிக்கைப்படி
1. மஸ்கட் 2438 1639 1037 5114
2. பீரங்கிகள் 16 16
3. மாட்ச்லாக் 979 944 1584 3507
4. கைத்துப்பாக்கி 126 19 67 }
  1. Madurai District Records vol. 1178(A) (17-5-1802), p 354
  2. Madurai District Records vol 1139,(16-1-1802) p. 27.