இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
235
சின்னமருது சேர்வைக்காரர் மகன் துரைச்சாமியை மேலூர் அருகே பிடித்து காவலில் வைத்தது | 27-10-1801 |
மீனங்குடி முத்துக் கறுப்பத் தேவரை குத்தகை நாட்டில் பிடித்து காவலில் வைத்தது | 27-10-1801 |
வாராப்பூர் பாளையக்காரர் பொம்மை நாயக்கரைப் பிடித்து காவலில் வைத்தது | 27-10-1801 |
சேடபட்டி அம்பலகாரரையும் அவர் மகனையும் பிடித்து தூக்கிலிட்டது | 1-11-1801 |
ராஜசிங்கமங்கலம் ஜகந்நாத ஐயனை நாடு கடத்தி கடலுக்கு அப்பால் அனுப்பியது | 1-11-1801 |
கோபால மணியக்காரரையும் வெங்கடாசலத்தையும் நத்தத்தில் தூக்கிலிட்டது | 2-11-1801 |
கள்ளர்மக்கள் தலைவர் சேதுபதியை சும்மணப்பட்டியில் தூக்கிலிட்டது | 6-11-1801 |
அபிராமத்தில் கனக சபாபதித் தேவரை தூக்கில் இடப்பட்டது. | 16-11-1801 |
சிவத்தையா, ஊமைத்துரையை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெளியில் சிரச்சேதம் செய்தது | 16-11-1801 |
சின்னமருது சேர்வைக்காரர் மகன் துரைச்சாமி சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர்; சடைமாயன் உள்ளிட்ட எழுபத்து இரண்டு பேர்களை நாடு கடத்தி பினாங் தீவிற்கு அனுப்பியது | 11-2-1802 |
சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதும் காவலில் வைக்கப்பட்டதும் | 26-3-1802 |