பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


"ஆகையால் நீங்கள் பிராம்மணர்கள், வைசியர், செட்டியார், சூத்திரர், இசுலாமியர் - ஆகிய அனைவரும் - மீசை வைத்துள்ள அனைத்து ஆண் மக்களும் - பொதுப் பணியிலோ, ராணுவசேவையிலோ அல்லது சுபேதா ராகவோ, ஜமேதாராகவோ, நாயக்கு, சிராங்கு ஆகிய பரங்கியர் பணியில் இருப்பவர்களும் - ஆயுதம் தாங்கிப் போராடும் வல்லமை பெற்ற அனைவரும், தங்கள் ஆண்மையை, திறமையை முதன்முறையாக நிரூபித்துக் காட்டுங்கள்.

"நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும், அவர்களை அழித்து ஒழியுங்கள். மாறாக, தொடர்ந்து அதே இழி பிறப்புக்களிடம் பணியாற்றினால், உங்கள் சாவிற்குப் பின்னர் மறுமை இன்பங் கிடைக்காது. இந்த உண்மையை அறிந்தவன் நான். ஆதலால் இதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கழி சடைகள்! அவர்களுக்கு அறுசுவை உணவு கிடைக்காமல் போகட்டும். அவர்களது மனைவிகள் மாற்றானது மனைவியாகட்டும். அவர்களது மக்கள் இழிபிறப்புக்களாகப் போகட்டும். பரங்கிகள் இரத்தக் கலப்பில்லாத அனைவரும் உடனே ஒற்றுமைப்படுங்கள்.

"இந்த அறிவிப்பை படிக்கின்றவர்கள், கேள்விப்படுகின்றவர்கள், இதற்கு நகல் எடுத்து, தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள். பொது இடங்களில் இங்குள்ளதைப் போன்று இந்த அறிவிப்பை ஒட்டி அவசியம் பிரசித்தம் செய்யுங்கள்.

"இவ்விதம் செய்யாதவர்கள்-பஞ்சமா பாதகங்களைச் செய்ததோஷத்திற்கும், கங்கைக்கரையில் பசுவதை செய்த பாவத்திற்கும் உரிய தண்டனையைப் பெறுவார்களாக!

"இந்த வேண்டுகோளை மதிக்காத இசுலாமியர், விலக்கப்பட்ட பன்றியின் இரத்தத்தைப் பருகிய பாதகர்களாகப் போகட்டும்!