பக்கம்:மாவையந்தாதி.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை. இம்மாவையந் தாதியின் ஆக்கியோனும், செவ்விய தமிழ்ப் புலமை கைவந்த பாவலரும், தெல்லியம்பதியைப் பிறப்பிட மாகவுடையாரும், சென்னையில் ஆசிரியராயிருந்தவரும், சிவ நேயச் செல்வருமாகிய திரு. பூதப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள், எனது தாயாரோடு உடன்பிறந்தாராவர். இவர் மணஞ்செய்யாமலே, தனது நாற்பத்தைந்தாவது வயதிற் சென்னையிற் காலகதியடைந்தனர். இவ்வந்தாதி இற்றைக்கு ஐம்பத்தோராண்டுகளின் முன், செனனப்பட்ட ணம், சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் இவரால் வெளியிடப்பெற்றது. இந்நூல் மறைந்தொழிந்துபோகாது பாதுகாத்தற் பொருட்டும், இவரது பெயரை நிலைநிறுத்தற்பொருட்டும் யானிதனை இதுபொழுது அச்சிட முன்வந்துள்ளேனென்ப தைத்தரிழன்பராயினார்க்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். இதற்குச் சிறந்ததோருரை யெழுதியுதவுவார்க்கு, என் னாலியன்றவரை பரிசளிப்பே னென்பதையும் அன்போடறி யத்தருகின்றேன். Lanka British Hat Mart, 101, 103, Norris Road, COLOMBO. இங்ஙனம், சின்னத்தம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/3&oldid=1531007" இலிருந்து மீள்விக்கப்பட்டது