இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குயில்
சித்தமிலேன் என்றாலும்
தீங்குழற்பண் தெய்விகத்தெம்
சிறுமையெலாம் மாயுமென்ற
செவிக்கனவைத் தவிர்க்ககிலேன்
புத்தியிலாப் பிள்ளமையாய்ப்
போனதெனில் நானுமுன்றன்
போகவிசைப் பேருலகில்
புகவிழைவேன் இணைசுரமாய்
வித்தையினால் வானூர்ந்தும்
மிகச்சிறுத்த உளமுடையோம்
மென் தளிர்ப்பூ மரத்தமர்ந்தும்
விண்ணெட்டும் உளமுடையாய்.
101