பக்கம்:மின்னல் பூ.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வண்ணப் பதுமை


என்மனைத் தேவியின் உள்ளத் தழகினை
இன்றுணர்ந் தேனவள் ஏங்கித் தவித்திட
அன்பினைக் காணாமல் வெற்றுடல் மாயத்தில்
அலைந்த எனக்கினி உய்வு முண்டோ?

என்றுளம் சாம்பிடும் வேளையில் தெய்வமாய்
என்னை நினைத்தவள் மங்கல நாணினள்
பொன்னுளம் பூரிக்கக் காலைப் பிடித்தனள்
பொம்மை மறைந்தது மங்களம் பொங்கியதே.

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/103&oldid=1121442" இலிருந்து மீள்விக்கப்பட்டது