பக்கம்:மின்னல் பூ.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அமரநற் கவிதை


அமரநற் கவிதையின் கற்பனைகளில்-வரும்
ஆநந்தம் போல்வடிவச் சிற்பமங்கையே
தமரக் குழைவினொடு வெண்முகைப்பொதி—மிகத்
தாங்கிச் சுருண்டு வரும் வாரிய லைபோல்
மோதி பயணியாய் உள்நிவந்தெழும்—காதல்
மோகனத் தேன் நெருப்பு வீசுமலையால்
பாதி உயிர் குறைந்து வாடியயர்ந்தேன்— உன்றன்
பார்வை மழைக் குருகி ஏங்கிநின்றுளேன்

தூரிகை நாணடைந்து ஓடிஒளியும்—கவிச்
சொல்லுந் தன் நாவிழந்து மாழ்கிநைந்திடும்
காரியம் எங்கள்கையை விஞ்சிய தென்றே—உயர்
காவியப் பெருங்கோயில் நற்கலைஞரும்
யாவரும் ஓர்முகமாய்க் கூறவல்லதோர்—தனி
எழிலின் இளம்பருவத் தெய்வ மணியே
பாலினுக் கெட்டாத பண்ணின் சுவையே— என்றன்
பச்சை யுௗந்தழைய நோக்கி யருள்வாய்.

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/110&oldid=1121453" இலிருந்து மீள்விக்கப்பட்டது