இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வானத்தில் எழுமேழு வண்ணத்து வில்லினில்
வைரக்கால் அறிவொளி
ஊஞ்சலிட்டு
கானத்தில் சுந்தர்வம் மோனத்தில் கயிலாயம்
காட்டியே நிலை நின்று
ஆடிடுவோம்
பானத்திற் கின்சுவை அமுதத்தை விஞ்சிய
பால் நிலாக் குண்டலிச்
சாற்றினையே
தானத்தில் நின்றாற்றாய் வாங்கியே மாந்திநற்
சாந்தியாம் பெருநிலை
மேவிடுவோம்
தேனொத்த விழிவண்டும் திரளாண்மைத் தோட்குன்றும்
சிறுகுட்டைப் பாசத்தில்
வீழ்வதனால்
தானொத்த நிலைமேவி நீயின்றி நானின்றித்
தன்மய மாகும் பேர்
இன்பமெல்லாம்
சீனத்து வெடிமாக அரவத்தில் மாயாமல்
செம்மைசேர் தூய நல்
லன்பறத்தால்
ஊனத்துக் குறைநீங்கி உள்ளொளி மேலோங்கி
உண்மைக் குழந்தைகள்
ஆகிநிற்போம்.
112