பக்கம்:மின்னல் பூ.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அழிந்த கூடு


ஆரடா கூடிதனை அழித்த கொடும்பாவி
ஆரந்தப் பேய்க்கையன்
அற்புக் கொடுங்கழுகோ?

வல்லூரோ? விஷப்பாம்போ? மனிதனிதைச் செய்வானே?
கல்லாத இயல்பூக்கம்
கட்டிவைத்த கூடு சுற்றிப்

படபடத்துச் சிறையடித்துப் பாவியென்றே மாரடித்து
மடிகின்றாய் ஐயையோ!
வந்துவந்து பார்க்கின்றாய்!

பொன்முட்டை களவாச்சோ? பொன்குஞ்சு பறிபோச்சோ?
சின்னஞ் சிறுசிட்டே
தேம்பியெனைச் சீருதே:-

திட்டம் வகுத்துவிட்டேன் சேர்ந்திடுவீர் செம்மனத்தீர்
கொட்டம் அடக்கிடுவோம்
கொடுமை அழித்திடுவோம்;

வலியில்லா நல்நெஞ்சம் வஞ்சனைக்கு மாளாமல்
கலியோட்டி, அறங்காத்துக்
கருணையெங்கும் கூட்டிடுவோம்:

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/31&oldid=1116707" இலிருந்து மீள்விக்கப்பட்டது