இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாந்தத்தின் மூர்த்தியைக் கண்டோம்-எங்கள்
காந்தியாம் அண்ணலைக் கண்டோம் கண்டோம்
மாந்தரில் மாணிக்கம் கண்டோம்-இந்த
மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கண்டோம்
(சாந்தத்தின்)
புத்தனும் இயேசுவும் போன்றான் - எங்கள்
பொன்முடி இமயத்துப் புனிதனும் போன்றான்
உத்தம அன்பும் அருளும் - அவை
ஓர்வடி வாகவே வந்தவன் காந்தி
(சாந்தத்தின்)
ஆர்செய்த நற்பெருந் தவமோ - இந்த
அண்ணலை நம்மிடைக்கண்டதோர் பாக்யம்
பார்செய்த புண்ணியம் என்போம் - நேரில்
பார்த்திரு கண்பெற்ற பேறையும் பெற்றோம்
(சாந்தத்தின்)
பாரத நாட்டுக்குத் தந்தை - அதன்
பண்பின் வடிவமாய் வந்தவன் காந்தி
சாரதி கண்ணன்போல் வந்தான்-கையில்
சக்கரம் ராட்டையே கொண்டறம் செய்தான்
(சாந்தத்தின்)
41