பக்கம்:மின்னல் பூ.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவள் பார்த்தாளோ?


காலையிளம் பொற்கதிர்கள் கனவின்புதுச் சேதிகளைச்
சாலமிகச் சுமந்தேறிச் சன்னல்வழிப் பாய்கையிலே
மெல்லியவள் முகத்திருத்தி மெதுவா யெழுத்திருந்தாள்
மல்லிகைப்பைம் பந்தலின் கீழ் வந்துநின்று பார்த்திருந்தேன்-
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லா மறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன், அறிய வழி காணேனே.


நண்பகலில் வெயில்கனல் நளினமலர்க் குளந்தனிலே
தண்புனலில் மின் கொடிபோல் தர்தியுடன் ஆடி நின்றாள்
விண்ணிடத்தே கிளைபரப்பி வீசும் வெயில் தனைமறைத்து
மண்ணிடத்தே விழுதூன்றும் வடத்தின்பின் பார்த்து நின்றேன்-
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/47&oldid=1116829" இலிருந்து மீள்விக்கப்பட்டது