இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வருக அன்னாய் வருக!
பயங்கர நாமிநீ வருக!
மூச்சினில் சாவினை மூட்டும் தேவியே,
அடிமலர் அதிர்ச்சியால் அண்டம் பொடிக்கும்
காலகாலி நீ வருக!
வருக அன்னாய் வருக!
மிடிமையை எதிர்த்தே மிடுக்கொடு நிற்போன்
சாவினை விருப்புடன் தழுவவே முந்துவோன்
ஊழிக்கூத்தினில் உளமகிழ்ந் தாடுவோன்
அவனையே தேடி அன்னைவந் திடுவாள்.
சுவாமி விவேகானந்தர் வாக்கின் பெயர்ப்பு.
52