பக்கம்:மின்னல் பூ.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறை குடம்


சிந்தை நிறை வெய்தால் செல்வமிக எய்தினவன்
அந்திபகல் தொழுதேத்தி, அடியனுக்கோர் குடம் நிறையப்
பொன் கொடுத்தால் போது மென்றான்; பூரணமாம் கற்பகமும்
மின்னோடும் பொற்காசை வெள்ளிக் குடமேழில்
அள்ளிக் கொடுத்துவிட்டு அரை குடமாய் மற்றொன்றும்
கொள்ளக் கொடுத்ததுவே -குறையாத பேராசைச்
செல்வனந்த நாள் முதலாய்க் குறைகுடமே சிந்தனையாய்
எல்லா வகையாலும் இங்கதனை நிரப்பிடவே
ஏழு குடப் பொற்காசை இமைப்பொழுதும் பாராமல்
கோழிக்கு முன்னெழுந்து கும்மிருட்டுச் சாமம்வரை
காலமதைக் கருதாது கடும்பசியும் பாராது
வேலையோ வேலையென வெவ்வேறு சூழ்ச்சிகளால்
பொற்காசு தான்தேடப் புகுந்திட்டான்; ஒவ்வொன்றாய்ப்
பெற்றெடுத்துக் குறைகுடத்தில் பேராவ லாய்ப் போட்டான்.
குடம் நிறைய வேண்டுமெனும் ஆசைவெறிக் கொடும்பேயால்

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/73&oldid=1121384" இலிருந்து மீள்விக்கப்பட்டது