இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புயல்
தூக்கியே தோளினில் வைத்தேன்—பசுந்
துளவமால் மச்சத்தை யொத்தேன்
காக்கும் கடவுள்நீ தஞ்சம்—உன்றன்
சுழலடி வைத்துள்ளோம் நெஞ்சம்
என்றந்த வெள்ளத்தில் காலை—நான்
எட்டியே வைத்திடும் வேளை
குன்றம் அதிர்ந்தது கனவும்—இங்கு
குலையவே வந்தது நனவும்.
83