பக்கம்:மின்னல் பூ.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புயல்


தூக்கியே தோளினில் வைத்தேன்—பசுந்
துளவமால் மச்சத்தை யொத்தேன்
காக்கும் கடவுள்நீ தஞ்சம்—உன்றன்
சுழலடி வைத்துள்ளோம் நெஞ்சம்

என்றந்த வெள்ளத்தில் காலை—நான்
எட்டியே வைத்திடும் வேளை
குன்றம் அதிர்ந்தது கனவும்—இங்கு
குலையவே வந்தது நனவும்.

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/83&oldid=1121413" இலிருந்து மீள்விக்கப்பட்டது